
பீகாரில் குழந்தை பாக்கிய வேண்டி பூஜை ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதில் யுகவல்(65) என்ற முதியவரை கடத்தி நரபலி கொடுத்த சுதிர் என்ற நபர், மாந்திரீகர் மற்றும் அவரது மூன்று சீடர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காணாமல் போன யுகவலை தேடிய போது மாந்திரீகரின் வீட்டிற்கு மோப்ப நாய்கள் போலீசாரை அழைத்துச் சென்றுள்ளது. அவரை விசாரித்ததில் இதற்கு முன் இளைஞர் ஒருவரை பலி கொடுத்ததும் தெரியவந்துள்ளது.