ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று நேற்று மாலை 4 மணியளவில் தாம்பரம் நோக்கி புறப்பட்ட நிலையில் பாம்பன் ரயில் பாலத்தை கடந்து ரயில் கடற்கரை பூங்கா அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு நபர் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது, எதிர்பாராத விதமாக ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த தகவல் ராமேஸ்வரம் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உயிரிழந்த நபர் மரியகெல்டன் (35) என்பது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.