
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஓபன் ஏஐ விசில் புளோயர் சுசீர் பாலாஜி என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் இவருடைய தாய் இவரது மரணம் தொடர்பாக புதிய தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளார். அதாவது சுசீர் உயிரிழந்த நாளன்று இரவு 7.30 மணிக்கு இரவு உணவுடன் சென்றதாக சிசிடிவி புகைப்படம் ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார். இதனை மருத்துவ பரிசோதனை அலுவலகத்திடம் காட்டியுள்ளார். அதற்கு அவர்கள் சுசிர் மரணத்தை கைவிடுவதாக கூறியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் மரண பரிசோதனை அறிக்கையில் சுசிர் பாலாஜியின் மரணம் தற்கொலை என உறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு துப்பாக்கி அவரது பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அவரது இரண்டு கைகளிலும் துப்பாக்கி சாயம் காணப்பட்டதாலும் அது தற்கொலை என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் இதைத்தொடர்ந்து அவரது சிடி ஸ்கேன் மற்றும் பரிசோதனை முடிவுகளை வைத்து சுசிர் குடும்பத்தினர் தொடர்ந்து வாதாட உள்ளதாகவும் கூறினார்கள். இந்த விவகாரம் தொடர்பாக டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்துடன் விரைவில் முறையிட இருப்பதாகவும், எலான் மஸ்கிடம் புகார் அளிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் பூர்ணிமா ராவ் கூறினார்.
இதைத்தொடர்ந்து சுசிரின் உடலில் இருக்கும் காயங்கள் மற்றும் உடல் பார்வையின் சரியான பதிவுகளை OCME அலுவலகம் கண்டு கொள்ளவில்லை என்றும், சுசிரின் கன்னம் சிதைந்து காணப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் சுசீர் பாலாஜி தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக அறிவிக்கப்பட்டாலும் அவரது குடும்பத்தினர் இந்த வழக்கில் பல சந்தேகங்கள் இருப்பதாக தெரிவித்து வருகின்றனர். மேலும் சுசிரின் குடும்பம் அவரது மரணம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றது.