
ஐரோப்பாவின் மிகப்பெரிய லாட்டரி டிக்கெட் பரிசு அயர்லாந்தை சேர்ந்த ஒருவர் வென்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மிகப்பெரிய யூரோ மில்லியன்ஸ் ஜாக்பாட் பரிசான ரூபாய் 2,120 கோடி தொகையை அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு நபர் வென்றுள்ளார்.
அந்த லாட்டரி டிக்கெட் பரிசின் மூலம் அந்த நபர் கால்பந்து வீரர் ஹாரிக்கேன் மற்றும் பாப் பாடகி துவா லிபா போன்றவர்களை விட மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
இதுகுறித்து அயர்லாந்து தேசிய லாட்டரி அமைப்பு வெற்றியாளர் தனது டிக்கெட்டை பயன்படுத்தி லாட்டரி தலைமையகத்தில் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தியது.
மேலும் ஐரிஷ் நாட்டின் 18 வது யூரோ மில்லியன் ஜாக்பாட் வெற்றியாளர் அந்த நபர் ஆவார். லாட்டரி டிக்கெட் வெற்றியாளரின் தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இது அயர்லாந்து வரலாற்றில் மிகப்பெரிய லாட்டரி வெற்றி ஆகும்.