ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் அந்த தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரான வி.சி சந்திரகுமார் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, இந்த தேர்தலின் வெற்றிக்கு காரணம் தமிழக அரசு மக்களுக்கு செய்த நலத்திட்டங்கள் தான்.

இந்த தேர்தலில் மட்டும் அல்ல, வருகிற 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் திமுக வெற்றி பெறும். இந்த வெற்றி பெரிய வெற்றி என்றார். அதன் பின் அவர் கூறியதாவது இறந்தவர்களை இழிவாகப் பேசும் போக்கை நான் கடுமையாக கண்டிக்கின்றேன். பெரியார் மறைந்த பின் அவர் பற்றி அவதூறாக பேசுவது அருவருக்கத்தக்கது. அதுமட்டுமின்றி பெரியார் மண்ணில் இதுபோல் பேசும் சீமான் மனித பிறவியே கிடையாது என்று கூறினார்.