
அமெரிக்காவில் ஓடுபாதையை விட்டு விலகி ஓடிய விமானத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோவில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் மாசாசூசெட்ஸ் மாகாணம் பாஸ்டன் லோகன் விமான நிலையத்தில் தரையிறங்கியது.
அப்போது தரை இறங்க முயன்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையை விட்டு விலகி அங்குள்ள புல்தரையில் சிறிது தூரம் ஓடியது. உடனே அந்த விமானம் நிறுத்தப்பட்டது.
அந்த சிறிய விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இருப்பினும் விமானம் திடீரென ஓடுபாதை விட்டு விலகியது குறித்து விமான போக்குவரத்து துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.