பல சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை ராக்கி சாவந்த். இவர் ஹிந்தி பிக்பாஸில் கலந்து கொண்டு பல விதமான பிரச்சனைகளை ஏற்படுத்தி வைரல் ஆகி உள்ளார். இப்போது இவர் பிக்பாஸ் இல் இருந்து வெளியேறிய நிலையில் சில தினங்களுக்கு முன்பு கதறி கதறி அழுது பேசிய வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதற்கு காரணம் அவரது அம்மா பிரைன் கியூமரால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலும் இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது தனது தாய் இப்படி இருக்கின்றார் என்பது குறித்து யாரும் சொல்லவில்லை என்ற குற்றச்சாட்டை கோபமாக வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது ராக்கி சாவந்த் அவரது காதலர் ஆதில் என்பவரை இரகசியமாக திருமணம் செய்து கொண்டிருக்கின்றார். அதன் புகைப்படங்கள் இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. தாய் மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலையில் ரகசியமாக திருமணம் செய்தது ஏன் என்று ரசிகர்கள் கோபத்தில் இருக்கின்றார்கள்.