கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரு பகுதியில் பூசாரி ஒருவர் வசித்து வருகிறார். இவரது 5 வயது மகளுக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதையடுத்து அவரது தந்தை அந்த சிறுமியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அப்போது சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யுமாறு அறிவுறுத்தினர்.

மேலும் இந்த அறுவை சிகிச்சைக்கு ரூபாய் 40 லட்சம் முதல் ரூபாய் 60 லட்சம் வரை செலவாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பல மருத்துவமனையில் சிகிச்சை அளித்ததில் ரூபாய் 7 லட்சம் செலவு செய்த பூசாரி, இவ்வளவு பெரிய தொகைக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார். இதையடுத்து அவரது நண்பர் ஒருவர், ஃபயாஸ் என்பவரின் செல்போன் எண்ணை கொடுத்து அவரிடம் உதவி கேட்க கூறினார்.

இதையடுத்து உடனடியாக குழந்தையின் தந்தை மற்றும் அவரது ஊரைச் சேர்ந்த சிலர் பயாசை சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து பயஸ் கோவில் பூசாரி வீட்டிற்கு வந்து சிறுமியை சந்தித்து ஒரு வீடியோவை உருவாக்கினார். பிறன் பின்னர் கடந்த ஜூன் 30 ஆம் தேதி அன்று அந்த வீடியோவை வெளியிட்டார். இதையடுத்து மறுநாள் ரூ. 75 லட்சம் வசூலானது.

வீடியோவை வெளியிட்டு 16 மணி நேரத்தில் சிறுமியின் சிகிச்சைக்கு ரூபாய் 75 லட்சம் வசூமானது பெரும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து குழந்தைக்கு ஓரிரு நாட்களில் சிகிச்சை தொடங்கும் என்று தெரிவித்தனர்.