வங்கதேச தலைநகர் தாகா அருகே பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். கிஷெர்கஞ்ச் என்ற இடத்தில் நிகழ்ந்த கோர விபத்தில் 10க்கும்  மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில்,  100க்கும் அதிகமானோர் விபத்தில் சிக்கி உள்ளனர். இரு ரயில்களின் பெட்டி கவிழ்ந்த நிலையில் பயணிகள் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.