
இந்திய ரயில்வே பொதுப் பயண வகுப்புகளில் தினசரி ஏராளமான பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்த நிலைமையில், இடம் பிடிப்பதற்கான போட்டி சில சமயங்களில் பெரிய சண்டைகளாக மாறுகிறது. சமீபத்தில், ஒரு பொதுப் பயண பெட்டியில் இரு பயணிகளுக்கிடையிலான கடுமையான சண்டையின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Kalesh b/w Two Guys inside Indian Railways over seat issues
pic.twitter.com/cPn1IUtDae— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 11, 2025
அந்த வீடியோவில், மேல் பெர்த்தில் அமர்ந்திருந்த ஒருவரை கீழே இழுக்க முயற்சிக்கும் பயணி, பதிலடியாக தலையிலும் தோளிலும் மோசமாக அடிபட்ட காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவில், கீழே இருந்த பயணி மேல் பெர்த்தில் அமர்ந்திருந்த நபரின் கால்களைப் பிடித்து இழுக்க முயற்சிக்கிறார்.
ஆனால் மேலிருந்த நபர் தன்னைக் காப்பாற்ற முயற்சிக்கும்போது, இறுதியில் அவரது கால்கள் நேரடியாக எதிர்ப்பாராதவிதமாக அந்த நபரின் தோள்களில் விழுகின்றன. தொடர்ந்து அவர் அந்த நபரின் கழுத்தில் கால் வைத்து, கை மற்றும் பாதங்களால் கடுமையாக தாக்குகிறார். இந்த 26 வினாடிகளுக்குள் நடந்த சம்பவம் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோவை @gharkekalesh என்ற X (முன்னாள் ட்விட்டர்) பயனர் பதிவிட்டுள்ளார். “பொதுப் பெட்டியில் இருக்கைக்கான சண்டை தான் இது” எனக் கூறிய அவர், இது ஒரு இலவச நாடகத்தைப் போலவே இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது 40 ஆயிரத்திற்கும் மேல் பார்வைகளையும், 700-க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் பெற்றுள்ளது.
மேலும், இந்தக் காணொளியை பார்த்த பல பயனர்கள் “இப்போதெல்லாம் ஒவ்வொரு ரயில் பயணத்திலும் நாடகம் கட்டாயம்!” என வேடிக்கையாகவும், சமூக கட்டுப்பாடுகள் தேவை என்றும் உணர்ச்சியுடன் கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.
இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடைபெறுவதால், ரயில்வே அதிகாரிகள் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலும், பயணிகள் சுய ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகிறது.