
சிங்கப்பூரில் நடைபெற்றதாக கூறப்படும் ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வீடியோவில், ஒருபெண், தனது கணவனை வீட்டிலிருந்து வெளியே அனுப்புகிறார். காரணம்? அவரது ஆபீஸில் உள்ள பெண் பணியாளரை அவரை “பேபி” என்று அழைப்பது தான்.
View this post on Instagram
வீடியோவில், அந்த கணவன் கார்பார்க்கில் நின்றுக்கொண்டிருப்பதும், அவரின் மனைவி முதல் மாடியில் இருந்து கூச்சலிடுவதும் தெரிகிறது. “உன்னை நம்பி வாழ்ந்தேன்… நீ எனக்கு துரோகம் பண்ணிட்ட!” என அதிர்ச்சியில் அலறுகிறார்.
மனைவியின் கோபத்துக்கு காரணமான விஷயம், அவரது ஆபீஸ் தோழியை “பேபி” என அழைத்து தான். ஆனால் அதற்கு பதில் சொன்ன கணவன், “அவர் எல்லாரையும் அப்படி தான் கூப்பிடுவார்!” என்றார். வாக்குவாதம் தொடர, மனைவி ஒரு தலையணையும், பாலிஷ்டரையும் கீழே தூக்கி வீசி, “இப்போவே போ… இன்றைக்கு உன்னைப் பார்க்க விரும்பல” என்று கூறுகிறார். அதன்பின் கணவன் அமைதியாக அதனை எடுத்துக்கொண்டு வெளியே செல்வது வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, மக்கள் இருபுறமாக கருத்து தெரிவிக்கின்றனர். ஒருவர், “அவரால் இப்படி செய்தால் கோபம் வராதா? ஆபீஸ்ல எல்லாரையும் பேபி என்று கூப்பிடுவது எனக்கு நம்பிக்கையே வரல” என்கிறார். மற்றொருவர், “அவருக்கு இன்னும் அவர் மேல் பாசம் இருக்கு. இல்லையென்றால் அந்த தலையணை, பாலிஷ்டர் கொடுப்பாரா?” என கருத்து தெரிவித்துள்ளார்.