
சவூதி அரேபியாவின் மத்திய பகுதியில் உள்ள அல்தவாத்மி பகுதியை தாண்டி ஒரு பாலைவனப் பயணத்தில் சென்ற குடும்பம், கடந்த வாரம் 24 மணி நேரத்திற்கு மேலாக மணல் பள்ளத்தாக்குகளில் சிக்கி உயிர் பிழைத்த அதிர்ச்சிகரமான அனுபவத்தை சந்தித்தது. உணவு, தண்ணீர், மற்றும் தொலைபேசி சிக்னல் எதுவும் இல்லாத நிலையில், அந்தக் குடும்பம் வண்டியின் ரேடியேட்டரில் இருந்த தண்ணீரை குடித்து பிழைத்துக் கொண்டனர்.
பசிக்காக பாலைவன செடிகளின் இலைகளைக் கூட சாப்பிட்டனர். ஏப்ரல் 7 ஆம் தேதி இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் “KSA Expats” பக்கத்தில் பகிரப்பட்டதிலிருந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இறுதியாகக் காணப்பட்ட இடத்திலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் ஹல்பான் பாலைவனப் பகுதியில் அவர்கள் கண்டெடுக்கப்பட்டனர். இந்த குடும்பத்தை மீட்பதற்காக சவூதி தன்னார்வலர் குழுவான “என்ஜாத்” ஒரு பெரிய தேடல் நடவடிக்கையை ஆரம்பித்தது.
Saudi Family Rescued After 24 Hours Stranded in the Desert
A Saudi family went missing last week in the desert south of Al-Dawadmi after their car got stuck in the sand. They had no food, water, or phone signal. They survived by drinking water from the car’s radiator and eating… pic.twitter.com/L2TetkkaXW
— KSA Expats (@ksaexpats) April 7, 2025
இந்த குழுவினர் ட்ரோன்களை பயன்படுத்தி மேல்நோக்கி தேடி, தரையில் வாகனங்களிலும் சென்றும் குழுமங்களை அமைத்து தேடினர். அதிக வெப்பம், நிழல் இல்லாத சூழ்நிலை போன்ற தீவிர சூழ்நிலைகளில், அவர்கள் வெயிலால் ஏற்பட்ட தாகம் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில், குழுவினர் நேரத்துடன் போட்டிபோட்டு நடவடிக்கை எடுத்தனர். சிலர் நீரிழிவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தாலும், மீட்கப்பட்ட பிறகு உடனடியாக உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன.
சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் பரவி, எஞ்சாத் குழுவின் வீரத்துக்கும், தன்னார்வ செயற்பாட்டுக்கும் மக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். மேலும், எதிர்பாராத பயணங்களுக்கு முன் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வது அவசியம் என்பதையும் இச்சம்பவம் வலியுறுத்தியது.
பல இணைய பயனர்கள், “பாலைவனப் பயணத்திற்கு போகும்போது அதிக தண்ணீர், உணவு, சிக்னல் கொடுக்கும் வசதிகள் போன்றவை அவசியம்” என முக்கியமான அறிவுறுத்தல்களையும் பகிர்ந்துள்ளனர்.