இந்தியர்கள் மற்றும் தேநீர் என்பதை பிரிக்கவே முடியாது. ஒரு நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும், எந்த சூழ்நிலையிலும் தேநீர் சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள் இந்தியர்கள். இந்த உண்மையை அடிப்படையாக கொண்டு, ஆஸ்திரேலிய இன்ப்ளூயன்சர் ஆன்டி எவன்ஸ் (@theaussiebhai) சமூக ஊடகத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது அந்த வீடியோவில், ஒரு நபர் கழுத்து வரை தண்ணீரில் மூழ்கியபடி, அலட்டாமல் அமைதியாக ஒரு கப் தேநீர் குடிக்கிறார். பின்னணியில் டைட்டானிக் படத்தின் பிரபலமான இசை ஒலிக்க, “இந்தியர்கள் டைட்டானிக் மூழ்கி கொண்டிருக்கும் நிலையில்  இருந்தால் என்ன செய்வார்கள்?” என்ற கற்பனைக்கு இது பதிலளிக்கும் வகையில் இருந்தது.

அந்த நபர், தப்பிக்க முயலாமல், தடுமாற்றமின்றி, சோகம் ஏதும் காட்டாமல், முற்றிலும் அமைதியாக, கடைசி வரை ஒரு சொட்டு தேநீரையும் வீணாக்காமல் குடிக்கிறார்.

அந்த வீடியோவில், “உங்கள் கடைசி மூச்சை தேநீருக்காக பயன்படுத்துங்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை இந்த வீடியோ 97 லட்சத்திற்கு மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.

இந்தியர்களின் தேநீர் மீதான பிணைப்பை, நகைச்சுவையான முறையில வெளிப்படுத்தும் அந்த வீடியோவுக்கு, நெட்டிசன்களிடையே கலகலப்பான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

இதுகுறித்து ஒருவர் “அடுத்த முறை சற்று இஞ்சி சேர்க்கவும்” என எழுதியிருக்க, மற்றொருவர் “லைஃப் ஜாக்கெட் வேண்டாம்… தேநீர் வேண்டும்” என தாமஸாக பதிலளித்துள்ளார்.

மேலும், சிலர் “அது சரியான தேநீரா? மிகக் கஞ்சி மாதிரி இருக்கு!” என்றும், “கொஞ்சம் பால் கூடுதலா வைச்சிருக்கலாம்” என விமர்சித்துள்ளனர்.

இந்த வீடியோ, இந்தியர்களின் தேநீர் கலாச்சாரத்தை நகைச்சுவையாக வெளிக்கொணர்ந்துள்ளதோடு, “சோகமும் சரி… வாழ்வும் சரி… ஒரு கப் டீ-யோட தான் ஆரம்பிக்கணும்” என்பதையும் உறுதிப்படுத்துகிறது.