சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வரும் வீடியோ ஒன்று, பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. வீடியோவில் ஒரு சிவப்பு நிற ஸ்கூட்டிக்குப் பக்கத்தில் நின்றிருந்த ஒருவர் மீது, திடீரென ஒரு காளை வன்முறையாக தாக்குதல் நடத்துகிறது. தனது கொம்புகளால் அந்த நபரை தூக்கிச் சாலையில் இழுத்துச் செல்லும் அந்த காளை, தொடர்ந்து அவரை தாக்கிக் கொண்டே இருக்கிறது. இதை கண்ட மக்களும், சில பெண்களும் உதவ முயன்ற போது காளை அவர்களையும் தாக்க முயற்சிப்பதையும் வீடியோவில் காணலாம்.

 

இந்த வீடியோவில் காணப்படும் காளை, ஒரே இடத்தில் மட்டும் இல்லாமல் சுற்றிலும் உள்ளவர்களையும் அச்சுறுத்துவதாகவும், அந்த முதியவரை அடிவயிற்றிலும் கழுத்திலும் காயமடைந்த நிலையில் சாலையில் தவிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் சில குடிமக்கள் குச்சி, கட்டைகளைக் கொண்டு அந்த காளையை விரட்டுகிறார்கள். வீடியோவில் அந்த நபர் முடங்கிய நிலையில் கீழே விழுந்து, தானாக எழ முடியாமல் துடிக்கிறார். அந்த நபருக்கு உடனடி மருத்துவ உதவி தேவைப்பட்டது.

இந்த வீடியோ @gharkekalesh என்ற X பக்கத்தில் வெளியிடப்பட்டது. தற்போது இது 97 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த சம்பவத்தால், தெருக்களில் கட்டுப்பாடில்லாமல் காளைகள் சுற்றித் திரிவது பெரிய பிரச்சனை என்பதை பலர் நினைவூட்டியுள்ளனர். “இந்தியா முழுவதும் தெரு காளைகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.