
டாஸ்மாக் நிறுவனம் கடந்து 2022 ஆம் ஆண்டு காலி மதுபாட்டில்களை கடைகளில் திரும்பப்பெறும் திட்டத்தை முடிவு செய்தது. திரும்பப் பெரும் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் முழுவதுமாக அமலாக்கம் செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்ட உள்ளது. இந்தத் திட்டத்திற்கு தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் டெண்டர் கோரி உள்ளது. அதன்படி சென்னை, சேலம், திருச்சி, மதுரை என 4 மண்டலங்களாக பிரித்து டெண்டர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இங்குள்ள மதுக்கடைகளில் விற்கப்படும் மதுவின்போது கூடுதலாக 10 ரூபாய் சேர்த்து வசூலிக்கப்படும். பின்னர் காலி பாட்டிலை திரும்பப் பெற்ற பின் 10 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் முழுமையாக செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான டெண்டர் முடிவு செய்யப்பட்டு ஏப்ரல் மாதம் இறுதிக்குள் காலி மதுபான்களை திரும்பப்பெறும் திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.