கேரளா மாநிலம் வயநாடு அருகே தனியார் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த விடுதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் நிஸ்மா(24) என்ற பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அனுமதியின்றி தங்கும் விடுதி செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.