
திருவண்ணாமலையை சேர்ந்த 17 வயது மாணவியும், அவரது தாயாரும் சென்னை பூந்தமல்லியில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் அந்தப் பெண் இன்ஸ்டாகிராம் மூலம் வட சென்னையை சேர்ந்த சாய்(22) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து அந்த பெண் வாலிபருடன் செல்போனில் பேசி வந்தார். மேலும் அந்த மாணவி அடிக்கடி செல்போன் பார்ப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனை அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மாணவிக்கும், தாயாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து அந்த மாணவி சில நாட்களுக்கு முன் தனது வீட்டை விட்டு வெளியேறி, தனது தோழி ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் மாணவி தனது வீட்டுக்குச் செல்ல முடிவு செய்தார். அப்போது தனது காதலனை தனிமையில் சந்தித்து பேசலாம் என்று திட்டமிட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு ஒரு பழைய கட்டிடத்திற்கு காதலனை வருமாறு மாணவியை அழைத்துள்ளார்.
பின்னர் அங்கு வந்த காதலன் மாணவியை சந்தித்து பேசினார். அப்போது சாயின் நண்பர்கள் ராகுல்(26) உட்பட 2 பேர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். திடீரென சாயும் அவரது நண்பர்களும் அந்த மாணவியை அந்த கட்டிடத்திற்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். இதனை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனை அறிந்த 3 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடினர். இது குறித்து காவல்துறையினர் பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் வாலிபர்கள் அவரிடம் தவறாக நடக்க முயன்றது தெரியவந்தது.
இதுகுறித்து காவல்துறையினர் அந்த மாணவி மற்றும் அவரது தாயாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காவல்துறையினர் தப்பி ஓடிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.