டெல்லியில் உள்ள ஆதர்ஷ் என்ற நகரில் ராஜேஷ்குமார் கம்லா (56) என்பவர் தனது பேரனான மானத் (7) என்பவரை தூக்கிக்கொண்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறார். அப்போது எதிரே வந்த கார் திடீரென இவர்கள் மீது மோதியது. இதில் 2 பெரும் கீழே விழுந்தனர். இதில் ராஜேஷ்குமாருக்கு காயங்கள் ஏதுமில்லை. ஆனால் அவரது பேரன் காரில் உள்ள பின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டார்.

அதன்பின் அங்குள்ளவர்கள் சிறுவரை வெளியே இழுத்தனர். அவருக்கு பலத்த காயம் அடைந்துள்ளது. அங்குள்ளவர்கள் காரின் டிரைவரை பார்த்தபோது, அவர் 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி விரைந்து வந்த காவல் துறையினர் 17 வயது சிறுவனை கைது செய்தனர். அதோடு காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் வாகனத்தின் உரிமையாளர் மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.