தமிழகச் சட்டமன்றத்தின் மாண்புமிகு பேரவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்து அவையை வெற்றிகரமாக நடத்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் தவெகவைச் சேர்ந்த பெண் சட்டமன்ற உறுப்பினர் சத்தியபாமா. பெண்களுக்கான சம உரிமையும் அதிகாரமும் வெறும் மேடைப் பேச்சுகளாக மட்டுமே சுருங்கிவிடாமல், உண்மையான நிர்வாக மற்றும் அதிகார மையங்களில் அவர்கள் அமர வைக்கப்பட வேண்டும் என்ற கோட்பாட்டை முதலமைச்சர் விஜய் தனது அதிரடி நடவடிக்கையின் மூலம் நிஜமாக்கியுள்ளார்.
ஆளுங்கட்சியின் இந்தச் சீரிய முன்னெடுப்பு தமிழக அரசியலில் பெண்களின் பங்களிப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளதோடு, அரசியல் அரங்கில் பெரும் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. எந்தவொரு சமூக மாற்றமும் மேடை முழக்கங்களால் மட்டும் சாத்தியமாகிவிடாது, மாறாக முக்கியப் பதவிகளிலும் உயரிய இருக்கைகளிலும் பெண்களை அமரச் செய்வதன் மூலமே உண்மையான அதிகாரம் கைகளுக்கு வரும் என்பதை முதலமைச்சர் விஜய் இந்த முடிவின் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
சட்டமன்றத்தின் மிக முக்கியப் பொறுப்பான சபாநாயகர் ஆசனத்தில் பெண் பிரதிநிதி ஒருவர் அமர்ந்து அவைக் நடவடிக்கைகளைக் கையாண்ட இந்தத் தருணம், தமிழக அரசியலில் பெண்களின் அரசியல் ப பங்குகொள்ளும் திறனை உலகிற்குப் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது. சமூக வலைதளங்களில் இந்தச் செய்தி தீயாகப் பரவி வருவதோடு, தவெகவின் இந்த முற்போக்குச் சிந்தனைக்குத் தற்கால அரசியல் தலைவர்களிடம் இருந்து ஆதரவு பெருகி வருகிறது.
பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்கள் வெறும் அறிவிப்புகளாக இல்லாமல் செயலில் காட்டப்பட வேண்டும் என்பதற்கு இந்த வரலாற்றுச் சம்பவம் ஒரு சிறந்த சான்றாகும். எதிர்காலத்தில் மேலும் பல பெண்கள் இதுபோன்று மிக உயர்ந்த பொறுப்புகளுக்கு வரவும், அரசியலில் தங்களது ஆளுமையை நிரூபிக்கவும் இந்த நிகழ்வு ஒரு மிகப்பெரிய உந்துதலாக அமையும் என்பதில் ஐயமில்லை.
இது ஒரு வாய்ப்பு அல்ல… பெண் புரட்சி! 🔥
சட்டப்பேரவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்து சபையை நடத்திய சத்தியபாமா MLA!
ஒரு பெண்ணை அந்த உயரிய இருக்கையில் அமர வைத்து, வரலாறு படைக்க வாய்ப்பளித்தவர் முதலமைச்சர் விஜய்!
பெண்களுக்கு அதிகாரம் கொடுப்பது பேச்சில் அல்ல… அதிகாரத்தின்… pic.twitter.com/5oFSV3ZtVp
— Meiyyanathan (@mmeiyyanathan) September 2, 2026
“>
முதல்வர் விஜய்யின் இந்தத் தொலைநோக்குப் பார்வையையும், பெண் எம்.எல்.ஏ. சத்தியபாமாவின் சிறப்பான அவைக் கட்டுப்பாட்டையும் அரசியல் பார்வையாளர்களும் பொதுமக்களும் மிகுந்த உற்சாகத்துடன் பாராட்டி வருகின்றனர்.
