சுட்டெரிக்கும் இந்த மனிதநேயமற்ற காலத்தில், ஒரு சிறுவனின் பிஞ்சு மனசு காட்டும் பேரன்பு, இணையவாசிகள் அனைவரின் இதயத்தையும் நெகிழச் செய்துள்ளது. அதிகாலை 6 மணிக்கெல்லாம் தூக்கத்திலிருந்து எழுந்து, தெருவில் இருக்கும் நாய்களுக்குத் தன் பிஞ்சு கைகளால் அன்போடு பிஸ்கட் வழங்கும் அந்தச் சிறுவனின் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி, பலரின் மனங்களையும் வென்று வருகிறது.

பொதுவாகக் குழந்தைகள் அதிகாலையில் எழுவதற்கே பெரும் ஆர்ப்பாட்டம் செய்யும் நிலையில், இந்த சிறுவன் தனக்கான எந்த எதிர்பார்ப்பும் இன்றி, தெருவோரப் பிராணிகளின் பசியைப் போக்க வேண்டும் என்ற ஒரே நல்லெண்ணத்தோடு தினமும் காலையிலேயே களமிறங்கிவிடுகிறான்.

சிறுவன் அன்போடு பிஸ்கட்களை நீட்டும்போது, அந்தத் தெரு நாய்களும் எவ்வித அச்சமுமின்றி, அவனிடம் வால் ஆட்டியபடி அன்பைப் பொழியும் காட்சிகள் காண்போரின் கண்களில் ஈரத்தைச் கசிய வைக்கின்றன. பெரியவர்களுக்கே அரிதாகிப் போன இந்த உயிரிரக்கப் பண்பு, இத்தனை சிறிய வயதிலேயே அந்தச் சிறுவனுக்கு இயல்பாக அமைந்திருப்பதைப் பார்த்து இணையவாசிகள் வியந்து பாராட்டி வருகின்றனர்.

“குழந்தைகளுக்குப் படிப்பை விடப் பண்பையும், மற்ற உயிர்களிடத்தில் அன்பைக் காட்டும் மனப்பான்மையையும் கற்றுக்கொடுப்பதே உண்மையான கல்வி” என்று பலரும் கருத்து தெரிவித்து, அந்தச் சிறுவனின் செயலை சோஷியல் மீடியாவில் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

“>