மும்பையின் முக்கிய போக்குவரத்து நரம்பாகத் திகழும் வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில், மெட்ரோ பாதை 9 கட்டுமானப் பகுதியிலிருந்து கிரானைட் கற்கள் கீழே விழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விவகாரத்தில், மும்பை பெருநகர பிராந்திய வளர்ச்சி முகமை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு 1.25 கோடி ரூபாய் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பில் கடுமையான அலட்சியம் காட்டியதற்காகவும், கட்டுமானப் பணியின் போது போதிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியதற்காகவும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் பெரிய அளவிலான உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்ற போதிலும், பிஸியான நெடுஞ்சாலையில் நடந்த இந்த விவகாரம் வாகன ஓட்டிகளிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கட்டுமானப் பணிகள் நடக்கும் இடங்களில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒப்பந்த நிறுவனம் முறையாக மேற்கொள்ளாததே இந்த விபத்திற்கு முதன்மை காரணம் எனத் தெரியவந்துள்ளது.
மேலும் மெட்ரோ தூண்கள் மற்றும் பாலப் பணிகளின் போது பயன்படுத்தப்படும் கனரகப் பொருட்கள் மற்றும் கிரானைட் கற்கள் தகுந்த பாதுகாப்பு வலைகள் அல்லது தடுப்புகள் இன்றி கையாளப்பட்டதால், அவை எதிர்பாராதவிதமாக சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களுக்கு அருகில் விழுந்துள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்ட MMRDA அதிகாரிகள், ஒப்பந்ததாரரின் அலட்சியப் போக்கைக் கண்டித்து 1.25 கோடி ரூபாயை அபராதமாக விதித்ததோடு, பாதுகாப்பு குறைபாடுகளை உடனடியாகச் சரிசெய்யாவிட்டால் ஒப்பந்தமே ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
பெருநகரங்களில் உள்கட்டமைப்பு திட்டங்களைச் செயல்படுத்தும்போது வேகத்தை விடப் பொதுமக்களின் பாதுகாப்பே மிக முக்கியமானது என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் நினைவூட்டியுள்ளது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் விரைந்து செல்லும் நெடுஞ்சாலையில் இதுபோன்ற அலட்சியங்கள் பேரழிவிற்கு வழிவகுத்துவிடும் என்பதை உணர்ந்து, இனிவரும் காலங்களில் அனைத்து மெட்ரோ கட்டுமான தளங்களிலும் கடுமையான பாதுகாப்புத் தணிக்கைகளைச் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் ஒப்பந்ததாரர்களுக்கு விதிக்கப்படும் இந்த அபராதம் ஒரு எச்சரிக்கையாக அமைவதோடு, எதிர்காலத்தில் அனைத்துப் பணிகளிலும் உரிய பாதுகாப்புத் தரநிலைகள் உறுதியாகப் பின்பற்றப்படுவதை அரசு இயந்திரம் உறுதி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Schoolbus escapes as under work #Metro slab collapses near #MiraRoad. Work is done by #mmrda. #trending #accident #mumbai pic.twitter.com/mGXaMM4wRQ
— Chetna Raja (@ChetnaRaja) August 17, 2026
“>
