உலகளாவிய டிஜிட்டல் தொழில்நுட்ப சந்தையில் இந்தியா அடுத்தடுத்த மைல்கற்களை எட்டி வரும் வேளையில், தொலைத்தொடர்பு துறையில் ஒரு புதிய புரட்சிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவில் மிக விரைவில் அதிநவீன 6G  தொழில்நுட்ப சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளதாகப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மிகவும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

தற்சமயம் ஆஸ்திரேலியா நாட்டிற்குப் பயண மேற்கொண்டுள்ள அவர், அங்கு நடைபெற்ற முக்கிய பொது மேடையில் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியச் சமூகத்தினர் மற்றும் வம்சாவளியினர் பெருந்திரளாகப் பங்கேற்ற பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அப்போது அங்கு கூடிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், இந்தியாவின் அசுர வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பு குறித்துப் பல்வேறு முக்கிய அம்சங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அதில் ஒரு பகுதியாக, 5G சேவைகளைத் தொடர்ந்து, மிக அதிவேக இணைய வசதி மற்றும் மேம்பட்ட தகவல் பரிமாற்றத்திற்கு வழிவகுக்கும் 6G தொழில்நுட்பத்தை மிக விரைவாகவே பயன்பாட்டிற்குக் கொண்டு வரத் தற்போதைய இந்திய அரசு தீவிரமாக வேலை செய்து வருவதாக அவர் உறுதிபடக் கூறினார்.

சர்வதேச மேடையில் பிரதமர் மோடி ஆற்றிய இந்த உரை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், ஒட்டுமொத்த இந்தியர்களையும் பெருமையடையச் செய்துள்ளது.