இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் களம் இறங்கியதன் மூலம், ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 36 ஆண்டுகால சாதனையை முறியடித்து, மிக இளைய வயதில் இந்திய அணியில் அறிமுகமாகி வரலாற்றுச் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனிந்தர் சிங் வெளியிட்டுள்ள அறிக்கை தற்போது கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல் 2026 தொடரில் 237 ஸ்டிரைக் ரேட்டில் 776 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்ற வைபவ், தனது சர்வதேச அறிமுகப் போட்டியில் 10 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தபோது ஆட்டமிழந்தார். இது குறித்து மனிந்தர் சிங் அளித்த பிரத்யேக பேட்டியில், “வைபவ் சூர்யவன்ஷிக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
ஆனால் அவரை அயர்லாந்து தொடரிலேயே விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன், அங்கு சில தவறுகள் நடந்து அந்தப் பதட்டம் நீங்கியிருந்தால் இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக ஆடியிருப்பார்; அவர் அவுட் ஆன ஷாட் அவரது ஷாட் அல்ல, அது தடை செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார். மேலும், “பெரிய பெரிய வீரர்களே பதட்டப்படுவது இயல்புதான், உலகத்தரம் வாய்ந்த பும்ராவை பார்த்து பேட் கம்மின்சே ஒளிந்துகொண்டார்.
வைபவ் ஒரு தனி ஒருவராகவே போட்டியை வெல்லும் அசாத்திய திறமை படைத்த துணிச்சலான வீரர் என்பதால் இந்திய ரசிகர்கள் அவரிடம் கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்றும் மனிந்தர் சிங் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
