மத்திய பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் உள்ள நாகோத் அரச குடும்பத்தில் ஏற்பட்ட பயங்கர மோதலில், தற்போதைய எம்.எல்.ஏ நாகேந்திர சிங்கின் மருமகளும், பாபா ராஜாவின் மனைவியுமான யோகிதா சிங் என்பவரின் வயிற்றில் துப்பாக்கித் தோட்டா பாய்ந்து, அவர் ரீவாவில் உள்ள விந்தியா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்பொழுது உயிருக்குப் போராடி வரும் அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு நடத்திய முக்கியக் குற்றவாளியான சுனிதா சிங் பரிஹார் என்பவரைப் பரசமனியா போலீஸ் சௌகியினர் சம்பவ இடத்திலேயே கைது செய்த போதிலும், தற்பொழுது காவல் நிலைய லாக்அப்பில் இருந்து கசிந்துள்ள ஒரு வீடியோ ஒட்டுமொத்த காவல்துறை மீதும் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
ये जो मैडम थाने में ठाठ से बैठकर माज़ा पी रही हैं, उनपर आरोप है नागौद के पूर्व राजघराने की बहू को गोली मारने का आरोपी ने कथित तौर पर 9 गोलियां चलाई …और पुलिस थाने में इन्हें VVIP ट्रीटमेंट मिल रहा है https://t.co/DfGBKKATge pic.twitter.com/1Nu0eOYeaV
— Anurag Dwary (@Anurag_Dwary) June 12, 2026
சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் அந்த வீடியோவில், கொலை முயற்சி போன்ற கொடூரக் குற்றத்தைச் செய்த கைதி சுனிதா சிங், சட்ட விதிமுறைகளின்படி கம்பிகளுக்குப் பின்னால் அடைக்கப்படாமல், போலீஸ் அதிகாரிகளின் முன்னிலையிலேயே சொகுசாக நாற்காலியில் அமர்ந்து கொண்டு மிக நவாபி தோரணையில் போலீசாரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.
மேலும், அவருக்குக் காவல் துறையினரே குடிக்கத் தண்ணீரும், குளிர்பானங்களும் (Cold drinks) கொடுத்து விஐபி உபசாரம் (VIP Treatment) செய்து வருவதாகச் சோசியல் மீடியாவில் புகைப்படங்களுடன் புகார்கள் எழுந்துள்ளதால், “சட்டம் என்ன ஏழைகளுக்கும் செல்வாக்கு மிக்கவர்களுக்கும் தனித்தனியா பாஸ்?” என்று பொதுமக்கள் தங்களது ஆக்ரோஷமான கண்டனக் குரல்களை எழுப்பி இந்த வீடியோவை இணையத்தில் பயங்கரமாக ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
