நவீன உலகத்தில் வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் புழங்கும் இந்த காலக்கட்டத்திலும், பழங்குடியின மக்கள் தங்களுக்குள் பாரம்பரிய ஆயுதங்களான வில் மற்றும் அம்புகளைக் கொண்டு நடுரோட்டில் பயங்கரமாக மோதிக்கொள்ளும் விசித்திரமான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி ஒட்டுமொத்த இணையவாசிகளையும் தலைசுற்ற வைத்துள்ளது.
பப்புவா நியூ கினியா நாட்டின் மலைப்பகுதிகளில் வாழும் இரண்டு எதிரெதிர் பழங்குடியின குழுக்களுக்கு இடையே, நிலம் மற்றும் எல்லை வளங்களைப் பகிர்ந்துகொள்வதில் ஏற்பட்ட பழைய பகை காரணமாக இந்த பயங்கர மோதல் அரங்கேறியுள்ளது. கடந்த 2025 டிசம்பர் மாதத்தில் நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவத்தின் வீடியோவில், சாலையின் இருபுறமும் திரண்டிருக்கும் பழங்குடியின மக்கள் ஒருவரையொருவர் நோக்கி சரமாரியாக அம்புகளை எய்து தாக்குகின்றனர்.
Man dodges arrows in shootout between tribes, Papua New Guinea 2025 pic.twitter.com/mcF3sGTcxv
— War Monitor Clips (@WarMonitorClips) June 1, 2026
இந்த அம்புகளின் மழைக்கு நடுவே சிக்கிக்கொண்ட வாலிபர் ஒருவர், அதிலிருந்து தப்பிக்கப் போட்ட அசாத்தியமான சாகசங்கள் தான் தற்போது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அம்பு பாய்ந்து வரும் திசையை நொடிப் பொழுதில் கணித்து, அவர் குனிந்தும், காற்றில் எகிறி குதித்தும், மின்னல் வேகத்தில் திசையை மாற்றியும் அம்பு தன் மீது படாதவாறு தப்பியோடிய விதம் பார்ப்பதற்கு ஏதோ ஒரு ஹாலிவுட் ஆக்ஷன் படத்தின் கதாபாத்திரம் போலவே உதித்துள்ளது.
இந்த மோதலில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பெரிய அளவில் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய நவீன காலத்தில் இவர்களிடம் துப்பாக்கி, ட்ரோன் போன்ற தொழில்நுட்பங்கள் வந்து சேர்ந்திருந்தாலும், பேச்சுவார்த்தை மூலம் சமரசம் செய்துகொள்ளும் வாய்ப்பை தக்கவைப்பதற்காகவும், எதிரணியை எச்சரிப்பதற்காகவும் மட்டுமே இன்றும் அவர்கள் தங்களின் கலாச்சார அடையாளமான வில்-அம்புகளைப் பயன்படுத்தி எச்சரிக்கை விடுத்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இணையத்தில் லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு வரும் இந்த வாலிபரின் அசாத்திய சுறுசுறுப்பு மற்றும் சமநிலையைக் கண்ட நெட்டிசன்கள், “என்னப்பா இது, நிஜமாகவே இப்படி எல்லாம் நடக்குமா?” என ஆச்சரியத்துடன் கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.
