தர்மசாலாவில் நடைபெற்ற விறுவிறுப்பான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் நிர்ணயித்த 201 ரன்கள் இலக்கை, திலக் வர்மாவின் அதிரடி ஆட்டத்தால் (33 பந்துகளில் 75 ரன்கள்) மும்பை அணி கடைசி ஓவரில் எட்டிப் பிடித்தது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
போட்டி முடிந்த பின், ரசிகர்களுடன் உரையாடச் சென்ற மும்பை இந்தியன்ஸ் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி மீது, ரசிகர் ஒருவர் வீசிய செல்ஃபி போன் எதிர்பாராதவிதமாக முகத்தில் தாக்கியது.
🚨 AAKASH AMBANI ANGRY ON PUNJUB KINGS FAN !🤯
– When Akash Ambani was coming after the match to take photos with the Punjab fans, at that moment the Punjab fans accidentally hit Akash Ambani on the face with a phone, and Akash Ambani got very angry. After that, when the Punjab… pic.twitter.com/wFwhuS5498
— lndian Sports Netwrk (@IS_Netwrk29) May 14, 2026
“>
இதனால் நிலைகுலைந்த அவர் தொடக்கத்தில் கோபமடைந்தாலும், அது தற்செயலாக நடந்தது என்பதை உணர்ந்து அமைதியானார். பின்னர் ரசிகர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட அவர், அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டு பெருந்தன்மையுடன் அங்கிருந்து புறப்பட்டார்.
