வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் நாகித் ராணா, பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் மாஸ் சதகாத்திடம் தகாத முறையில் நடந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியின் போது ஏற்பட்ட ஆக்ரோஷமான சூழலில், ராணா கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி சதகாத்தை திட்டியது ஸ்டம்ப் மைக்கில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வல்லுநர்கள் ராணாவின் இந்த ஒழுக்கமற்ற செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மைதானத்தில் வீரர்களுக்கு இடையே போட்டி இருப்பது இயல்பு என்றாலும், தனிப்பட்ட முறையில் இது போன்ற ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது விளையாட்டு உணர்வுக்கு எதிரானது என்று பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

“>

இந்த விவகாரம் தொடர்பாக ஐசிசி நாகித் ராணா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே பரபரப்பாக நடைபெற்ற இந்தத் தொடரில், இதுபோன்ற மோதல்கள் வீரர்களின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் அமைந்துள்ளதாக விளையாட்டு விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.