சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் கிராமத்திற்குள் புகுந்த ஒன்பது பேர் கொண்ட மர்ம கும்பல், கையில் அரிவாள் மற்றும் பட்டாக்கத்திகளுடன் கண்ணில் பட்டவர்களையெல்லாம் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைதியாக இருந்த கிராமத்திற்குள் திடீரெனப் புகுந்து இத்தகைய வெறியாட்டத்தில் ஈடுபட்ட அந்த கும்பலின் செயல் அப்பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை உருவாக்கியுள்ளது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதைக் காட்டுவதாகப் பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் கிராமத்திற்குள், இருசக்கர வாகனங்களில் அரிவாள் மட்டும் பட்டாக்கத்திகளுடன் வந்த ஒன்பது மர்மநபர்கள், கண்ணால் கண்டவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இதே மாதிரியான தாக்குதல் 2 நாட்களுக்கு முன்பு தான் நாங்குநேரி…
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) March 5, 2026
இந்த வன்முறைச் சம்பவத்தைக் கண்டித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக மக்களின் நிம்மதி பறிபோய்விட்டதாகவும், குற்றவாளிகள் பயமின்றி வலம் வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். பொதுவெளியில் பட்டப்பகலில் நடக்கும் இத்தகைய தாக்குதல்கள் அரசின் நிர்வாகத் திறமையின்மையையே காட்டுவதாகத் தெரிவித்துள்ள அவர், அரசு உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
