2026 டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான போட்டியில், ஜஸ்பிரித் பும்ராவின் ஓவரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் ஷிம்ரான் ஹெட்மயர் களமிறங்கியவுடன், அவரை வீழ்த்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் பும்ராவை பந்துவீச அழைத்தார்.

பும்ராவின் பந்து பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனிடம் சென்றது. நடுவர் அவுட் கொடுத்தும், ஹெட்மயர் அதை ஏற்காமல் டிஆர்எஸ் (DRS) முறையீடு செய்தார். மூன்றாவது நடுவர் பரிசோதனையில் பந்து பேட்டில் பட்டது தெளிவாகத் தெரிந்தும், ஹெட்மயர் மைதானத்தை விட்டு வெளியேறாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் டிராமாவாக மாறியது.

இந்த ஓவரில் ஹெட்மயரை வீழ்த்தியதன் மூலம், பும்ரா அவரை இதுவரை 23 பந்துகளில் 6 முறை அவுட் செய்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளார். அதே ஓவரின் அடுத்தடுத்த பந்துகளில் ரோஸ்டன் சேஸையும் பும்ரா வெளியேற்றினார். சேஸ் அடித்த பந்தை சூர்யகுமார் யாதவ் காற்றில் பாய்ந்து ஒரு அபாரமான கேட்ச் பிடித்து அசத்தினார்.

“>

 

ஒரே ஓவரில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி ஆட்டத்தை தன்வசப்படுத்தியது. பும்ராவின் இந்த அசுரவேக பந்துவீச்சும், சூர்யகுமாரின் மின்னல் வேக கேட்சும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.