சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு நபர் ஆக்ரோஷமான பப்பர்டு சிங்கத்துடன் மிகவும் ஆபத்தான முறையில் விளையாடுவதைக் காணலாம். சிங்கத்தின் வாயைத் திறந்து அதன் பற்கள் மற்றும் உட்பகுதியை ஆய்வு செய்வது போல அவர் செயல்படுகிறார்.
ஒரு கட்டத்தில், எதிர்பாராத விதமாக அந்த சிங்கம் தனது தாடையை மூட முயன்றபோது, அங்கிருந்தவர்களின் ரத்தமே உறைந்து போனது. அந்த நபர் நூலிழையில் உயிர் தப்பிய போதிலும், காண்போரின் (உடல் சிலிர்க்க வைக்கும்) வகையில் இந்த காட்சி அமைந்துள்ளது.
View this post on Instagram
“>
மேலும் வனவிலங்குகளுடன் இத்தகைய ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவது எவ்வளவு உயிரிழப்பிற்கு வழிவகுக்கும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு முக்கிய எச்சரிக்கையாக இருக்கிறது. சிங்கம் போன்ற காட்டு விலங்குகள் எந்த நேரத்தில் எப்படி நடந்துகொள்ளும் என்பதை யாராலும் கணிக்க முடியாது.
ஒரு சிறு தவறு கூட அந்த நபரின் உயிரைப் பறித்திருக்கக்கூடும். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், வனவிலங்குகளின் எல்லையை மதிக்க வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது.
