இந்த வைரல் வீடியோவில் ஒரு நாய் ‘ராதே-ராதே’ என்று கேட்கும்போது கைகளை உயர்த்தி மனிதர்களைப் போல தாளம் போடுவதைப் பார்க்கலாம். இன்ஸ்டாகிராமில் @evyaanb என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவை 11 கோடிக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டு, 1 கோடிக்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர். கடந்த ஆண்டு ஜனவரியில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ தற்போது மீண்டும் ட்ரெண்டாகி, சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பயனர்கள் இந்த காணொளியை பார்த்து வியந்து, ‘ராதே-ராதே’ என்று கமெண்ட் செய்து ஹார்ட் இமோஜிகளைப் பகிர்ந்துள்ளனர். ஒரு பயனர் இந்த நாய் கோயில் படிக்கட்டுகளில் தினமும் ஆரத்தியின் போது இருப்பதாகக் கூறியுள்ளார்.
