காசியாபாத் கவிநகர் ராம்லீலா மைதானத்தில், செப்டம்பர் 26 அதிகாலை 3:30 மணியளவில், மதுபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் தனது I-20 காரை வேகமாக ஓட்டி, மைதானத்தில் உறங்கிக்கொண்டிருந்த மூன்று கடைக்காரர்கள் மீது மோதியதால் அவர்கள் படுகாயமடைந்தனர். மதுபோதையில் இருந்த ஓட்டுநர் ஈஷான் சிங், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன்றபோது, ராம்லீலா மைதானத்தின் இரண்டாவது வாயிலையும், E-பிளாக் வாயிலையும் மோதி கார் சேதமடைந்தது. இருப்பினும், அவர் காருடன் தப்பி ஓடிவிட்டார். ஆனால், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறை அவரை கைது செய்து, காரையும் கைப்பற்றியுள்ளது.
खबर है गाजियाबाद 📍
कुछ लोग शराब के नशे में इतने अंधे हो जाते है उनको इंसान नजर आने बंद हो जाते हैं। ऐसा ही कुछ हुआ गाजियाबाद के रामलीला मैदान में
कविनगर रामलीला मैदान में नशे में धुत कार सवार ने मजदूरों को रौंद
at Ghaziabad's Ramlila Maidan. A drunk driver ran over laborers… pic.twitter.com/PHKrlmC5nG— Faiz (@FMansikta60974) September 30, 2025
ராம்லீலா கமிட்டியின் துணைத் தலைவர் அஜய் ஜெயின் கூறுகையில், மைதானம் காலியாக இருந்தபோது, கடைகளை மூடிவிட்டு உறங்கிக்கொண்டிருந்த மதன் கோபால் (பிண்டு), விவேக், ஹீரேஷ் குமார் ஆகிய மூன்று கடைக்காரர்கள் மீது கார் மோதியது. கமிட்டி உறுப்பினர்கள் சத்தமிட்டும் ஓட்டுநர் கவனிக்கவில்லை. தப்பிக்க முயன்ற ஈஷான் சிங், மதுபோதையில் இருந்ததாகவும், வாயில்களை மோதிய பிறகு தப்பியோடியதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். அஜய் ஜெயின், ராம்லீலா மைதானத்தில் பாதுகாப்பை மேம்படுத்தவும், குற்றவாளிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் கோரியுள்ளார். ஈஷான் சிங், மீரட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், ராம்லீலா நிகழ்ச்சியைப் பார்க்க நண்பர்களுடன் வந்திருந்தார் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
