பாம்பு என்றாலே அனைவருக்கும் ஒருவித பயம் ஏற்படுவது வழக்கம். அதிலும் குடியிருக்கும் வீட்டில் பாம்பு நுழைந்தால் அனைவரும் பதற்றம் அடைந்து விடுவர். ஆனால் சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்று பெண் ஒருவர் செய்த செயல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
அதாவது அந்த வீடியோவில் பெட்ரூமின் கதவை திறந்து பார்த்தால் படுக்கையில் பாம்பு. ஆனால் அந்தப் பெண் அலறி அடித்துக் கொண்டு ஓடாமல் அதற்கு பதிலாக பரவசமாகி “ஏண்டா.. முருகா இன்றைக்கு உனக்கு பூஜை பண்ண.. வந்துட்டியா என்ன பாக்க” பக்தியில் உருகி அப்படியே நின்று கொண்டிருந்தார்.
View this post on Instagram
இச்சம்பவம் கடலூரில் நடைபெற்றுள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்கள் பலர் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
