சமீபத்தில் மெட்ரோ ரயில் நிலையத்தில் பதிவாகிய ஒரு குறும்பு (prank) வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு நெரிசலான நேரத்தில், ஒரு பெண், ஒரு இளைஞனின் மொபைல் போனை திருடுவது போல நடித்து, தனது பாக்கெட்டில் போனை எடுக்கிறார். இதைப் பார்த்த மற்றொரு பயணி உடனடியாக “ஏய்! அவள் திருடறா! போனை திருப்பிக் கொடு!” என சத்தமிட்டார். அதன்பின் அங்கு இருந்த மற்ற பயணிகள் குழப்பத்தில் அந்த பெண்ணை சுற்றி வட்டமிட்டனர்.
பின்னர் அந்த பெண், “இது எல்லாம் ஒரு குறும்பு வீடியோதான், நாங்கள் படம் பிடித்து கொண்டிருந்தோம், கேமரா இருக்குது” என விளக்கம் அளித்தாலும், அவளை எதிர்த்த இளைஞன் அதில் நகைச்சுவையை உணரவில்லை. அதனால் சிறிது நேரம் இடத்தில் பதற்றம் ஏற்பட்டது. பிறகு, அந்த பெண் மற்றும் அவரது குழுவினர் அங்கு இருந்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு, அங்கிருந்து வெளியேறினர்.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டதும், அது விரைவாக வைரலானது. பலரும் “இது என்ன மாதிரியான விளையாட்டு?”, “பயணிகள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தும் வகையிலான சம்பவங்கள் சமூக பொறுப்பில்லாமையைக் காட்டுகிறது” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram
“>
சிலர் இப்படியான குறும்புகள் எதிர்பாராத நேரத்தில் பெரிய பிரச்சனையையும், சட்டவிரோத புகாரையும் உருவாக்கலாம் என்று எச்சரிக்கவும் விடுத்துள்ளனர். “மக்கள் விருப்பமான ரீல்களுக்கு ஏன் இப்படி எல்லாம் செய்வார்கள்?” என வியப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம், சமூக ஊடகத்தில் பிரபலமாவதற்காக, பொது இடங்களில் அப்பாவி பயணிகளை குழப்பும் வகையில் செய்யப்படும் குறும்புகள் எவ்வளவு அபாயகரமானது என்பதை வலியுறுத்துகிறது.
