லக்னோவில் ஷானு என்ற நபர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவிக்கு 75 ஆயிரம் மதிப்புள்ள வைர மோதிரத்தை வாங்கியுள்ளார். அதன் பின் அந்த மோதிரத்தை தனது ஸ்கூட்டியில் உள்ள பெட்டியில் வைத்துவிட்டு மற்றொரு கடைக்கு வேறொரு வேலைக்காக இருவரும் சென்று விட்டனர்.

 

இந்நிலையில் நகைக்கடையில் இருந்து அவர்களை பின் தொடர்ந்து வந்த பன்டி பாப்லி மற்றும் இன்னொரு பெண் அந்த ஸ்கூட்டியில் இருந்த மோதிரத்தை எடுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இது தொடர்பான வீடியோ அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.