இந்தோனேஷியாவில் உள்ள வடக்கு சுலவேசி கடற்கரையில் ஒரு சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கப்பல் தலாவுத் தீவிலிருந்து சுமார் 280 பேருடன் கிளம்பிய நிலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்து ஏற்பட்டதும் கப்பலில் இருந்த பயணிகள் உடனடியாக கடலுக்குள் புதிது உயிரை காப்பாற்ற துணிந்தனர். இந்த விபத்தில் உயிரிழப்புகள் மற்றும் காயமடைந்தவர்களின் விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.