
அனைத்து சாதியினர் அர்ச்சகராகும் திட்டத்தில் வந்த அர்ச்சகரை வைத்து டாஸ்மாக் கடையில் தமிழக அரசு பூஜை செய்ததாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் இதுதான் திராவிடம் மாடலா? என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து தமிழக அரசு இதற்கு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் இது முற்றிலும் வதந்தியே. அர்ச்சகர் பூஜை செய்வது போல வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அது டாஸ்மாக் கடையல்ல. மேலும் அவர் அனைத்து சாதியினரும் அர்ச்சராகும் திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட நபரும் கிடையாது. கடந்த 2021 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே பதிவிட்டு வரும் இந்த பழைய வீடியோவை திரித்து வதந்தி பரப்பி வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.