
சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாசை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்தார். இந்நிலையில் இன்று செல்வ பெருந்தகை பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது சமூக நீதிக் கொள்கை கொண்டவர்களை காங்கிரஸ் எப்போதுமே மதிக்கும்.
ராமதாசை நான் சந்தித்தது மரியாதை நிமித்தமானது. அதில் அரசியல் கிடையாது. அவரது உடல் நலத்தை விசாரிக்கவே நான் சென்றேன். அவரை நான் சந்தித்ததில் பலருக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் இதை அன்புமணி அரசியல் ஆக்கியுள்ளது வேதனையை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.