
உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தின் மீரா சௌராஹா அருகே, ஆக்ரா நெடுஞ்சாலையில் ஓடும் பைக்கில் ஒரு ஜோடி அத்துமீறிய காட்சி தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு இளைஞன் ஹெல்மெட் அணியாமல் பைக்கை ஓட்டிக் கொண்டிருப்பதும், பெண் அவரது முன் பைக்கின் டேங்கில் படுத்து ஆபத்தான முறையில் பயணம் செய்பதும் தெளிவாக பதிவாகியுள்ளது.
இந்த பரபரப்பான காட்சி அருகே சென்ற மற்றொரு பயணியின் மொபைல் கேமராவில் பதிவு செய்யப்பட்டது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும், அவர்களிடம் போக்குவரத்து விதிகளை நினைவூட்ட முயன்ற பிற பயணிகளிடம், இளம் ஜோடி ‘உங்க வேலையை பாருங்க என பதிலளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
फिरोजाबाद: नेशनल हाईवे पर बाइक सवार कपल का रोमांस वीडियो वायरल। मीरा चौराहा क्षेत्र में चलती बाइक पर खुलेआम प्यार का प्रदर्शन, राहगीरों ने बनाया वीडियो। सोशल मीडिया पर तेजी से वायरल, हादसे का खतरा बढ़ा। pic.twitter.com/avOI3o3uko
— Ashish Paswan (@ashishpaswan0) June 27, 2025
இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் சென்றதும், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அந்த ஜோடி ஃபிரோசாபாத்திலிருந்து ஆக்ராவுக்குச் சென்றதாகவும், அவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. வீதியில் ஓடும் வாகனங்களில் விதிகளை மீறுவது மட்டும் இல்லாமல், பிற பயணிகளுக்கும் ஆபத்தாக மாறும் செயல்கள் மீதான கடுமையான நடவடிக்கையை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம், போக்குவரத்து விதிகளின் மீறலும், சமூக பொறுப்பில்லாத நடவடிக்கைகளும் எவ்வளவு ஆபத்தான முடிவுகளுக்கு வழிவகுக்க முடியும் என்பதற்கான விழிப்புணர்வாகவும், போலீசாரின் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கையின் முக்கியத்துவத்தையும் மீண்டும் ஒருமுறை உறுதி செய்கின்றது.