
சமூக ஊடகங்களில் வரும் ஜூலை 15ஆம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என்ற தகவல் பரவி வருகிறது.
இது குறித்து வெளியான தவறான செய்திகளுக்கு தனது இணையதள பக்கத்தில் மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி விளக்கம் அளித்துள்ளார்.
📢 महत्वपूर्ण
कुछ मीडिया हाऊसेस द्वारा दो-पहिया (Two wheeler) वाहनों पर टोल टैक्स लगाए जाने की भ्रामक खबरें फैलाई जा रही है। ऐसा कोई निर्णय प्रस्तावित नहीं हैं। दो-पहिया वाहन के टोल पर पूरी तरह से छूट जारी रहेगी। बिना सच्चाई जाने भ्रामक खबरें फैलाकर सनसनी निर्माण करना स्वस्थ…
— Nitin Gadkari (@nitin_gadkari) June 26, 2025
அதில் அவர் கூறியதாவது, “சில சமூக ஊடகங்கள் இருசக்கர வாகனங்களுக்கு சுங்க வரி விதிப்பது தவறான செய்திகளை பரப்பி வருகின்றன.
அதுபோன்ற எந்த ஒரு முடிவும் இதுவரை மத்திய அரசு முன்மொழியவில்லை. மேலும் இருசக்கர வாகனங்களுக்கான சுங்கவரிவிலக்கு முழுமையாக தொடரப்படும்”என பதிவிட்டுள்ளார்.