இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த மோதல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையீட்டைத் தொடர்ந்து இரண்டு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளன. இந்நிலையில் இஸ்ரேலுக்காக உழவு பார்த்த 3 பேருக்கு ஈரான் அரசு தூக்கு தண்டனை வழங்கியுள்ளது.

இஸ்ரேலுக்காக உளவு பார்த்து, அவர்களுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவியதாக ஈரான் அரசு குற்றம் சாட்டி இந்த தண்டனையை வழங்கியுள்ளது. இதே குற்றச்சாட்டுகளுடன் ஈரான் அரசு ஏற்கனவே 3 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.