
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் தங்கபாண்டி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் சரியாக படிக்காமல் அலட்சியமாக இருந்த தங்கபாண்டியை மாரியப்பன் கண்டித்துள்ளார்.
இதனால் சில நாட்களாக தங்கபாண்டி வீட்டில் இருக்கும் நபர்களிடம் பேசாமல் இருந்தார். நேற்று இரவு மாரியப்பன் வீட்டிற்கு முன் பகுதியில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தங்கபாண்டி தனது தந்தையின் தலை மீது கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்துள்ளார்.
அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மாரியப்பனின் உடலின் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தப்பி ஓட முயன்ற தங்கபாண்டியை கைது செய்து விசாரித்தனர். அப்போது சரியாக படிக்காததை கண்டித்ததால் தந்தையை கொலை செய்ததாக தங்கபாண்டி கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்போகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.