
கேரள மாநிலம் முளவுகாடு பகுதியில் பிலிப் (73) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு 14 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக ஆலப்புழா காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து முதியவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் போலீசார் தேடுவதை அறிந்த முதியவர் தலைமறைவாகி விட்ட நிலையில் அவர் கண்ணூரில் உள்ள ஒரு பகுதியில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் முதியவரை கைது செய்தனர். தற்போது அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.