
தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியில் இருந்து தானியங்கி முறையில் முன்பணம் வழங்குவதற்கு ஒரு லட்சம் ரூபாய் வரம்பு இருந்தது. இதை தற்போது ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் தங்கள் பி எப் கணக்கிலிருந்து திருமணம், மருத்துவம், கல்வி போன்ற தேவைகளுக்காக முன்பணம் பெற முடியும்.
இதனை நீங்கள் அதிகாரிகள் ஒப்புதல் இல்லாமலேயே தானியங்கி முறையில் ஒரு லட்சம் ரூபாய் வரை முன்பணம் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வரம்பு 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் உறுப்பினர்கள் அவசர தேவியின் போது விரைவாகவும், எளிதாகவும் பணத்தை பெற முடியும். கொரோனா பரவும் காலகட்டத்தில் ஒரு லட்சம் ரூபாய் வரம்புடன் தானியங்கி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது அது 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.