இமாச்சல பிரதேசம் சிரமவுரி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 20க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரியும் நபர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

பெற்றோர் பள்ளிக்கு வந்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது எழுத்துப்பூர்வமாக தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். அதன் பிறகு பெற்றோர் கூட்டத்தை கூட்டி விசாரித்த போது தான் அடுத்தடுத்த மாணவிகள் தங்களுக்கு நடந்த கொடுமையை தைரியமாக கூறியுள்ளனர்.

8 முதல் 10-ஆம் வகுப்பு படிக்கும் 24 மாணவிகளை கணித ஆசிரியர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கணித ஆசிரியரை கைது செய்தனர். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.