மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற நிலையை தொடர்ந்து, ஈரான் மேற்கொண்ட தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஈரான், அமெரிக்கா மீதான பதில் தாக்குதலில் 14 ஏவுகணைகளை ஏவியதாக கூறப்படுகிறது. அதில் 13 ஏவுகணைகள் துல்லியமாக சுட்டு வீழ்த்தப்பட்டன என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: “ஈரானின் பதில் தாக்குதல் மிகவும் பலவீனமானது. அமெரிக்கா இதற்கான எதிர்பார்ப்போடும், தயாரிப்போடும் இருந்தது. அந்த தாக்குதலை திறம்பட சமாளித்தோம். 14 ஏவுகணைகளில் 13-ஐ நாங்கள் வழிநடத்தும் முறையில் சுட்டுத் தகர்த்துவிட்டோம். ஒன்றே ஒரு ஏவுகணை மட்டுமே விடுபட்டது. ஆனால் அது எதையும் பாதிக்கவில்லை. எந்த அமெரிக்கர்களும் காயமடையவோ, உயிரிழக்கவோ இல்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

மேலும், ஈரான் தாக்குதல் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவித்ததற்காக அவர் நன்றி தெரிவித்தார். “ஈரான் தாக்குதலை மேற்கொள்கிறதாக எங்களுக்கு முந்தைய எச்சரிக்கை கிடைத்தது. அதனால் எதுவும் நிகழவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற சச்சரவுகள் வேண்டாம் என நம்புகிறேன்” என்றும் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், இரண்டு நாடுகளும் நேரடி யுத்தத்தைத் தவிர்த்து, கட்டுப்பாட்டில் உள்ள பதிலடி நடவடிக்கைகள் மூலம் தங்களது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றன. இந்த சூழ்நிலை இன்னும் எவ்வாறு மாறப்போகிறது என்பது பற்றி உலக நாடுகள் கவலையுடன் கண்காணித்து வருகின்றன.