
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரியில் திமுக அரசின் சாதனை விளக்கப் பருவக்கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி பங்கேற்று பேசினார். அப்போது நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டிலும் திமுக ஆட்சி தான் மீண்டும் அமையும்.
அவ்வாறு மீண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்கும் போது தமிழக வெற்றிகழகத் தலைவர் விஜய் பதவியேற்பு விழாவிற்கு வந்து நேரில் வாழ்த்துக்கள் தெரிவிக்க வேண்டும். மேலும் அதிமுக- பாஜக கூட்டணி என்பது 3 எஞ்சின் பொருந்தியது என அண்ணாமலையும், தமிழிசை சௌந்தர்ராஜனும் கூறி வருகிறார்கள்.
ஆனால் அது சக்கரம், பெட்ரோல், மெஷின் இல்லாத எஞ்சின். வரும் 2026 ஆம் ஆண்டு நிச்சயம் கூட்டணி ஆட்சி தான் வெல்லும் என அண்ணாமலையும், தமிழிசை சௌந்தர்ராஜனும் கூறுகிறார்கள். ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை என கூற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தைரியம் உள்ளதா?.
ஆனால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ராகுல் காந்தியை அழைத்து கூட்டம் நடத்தியபோது தமிழகத்தில் திமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என தைரியமாக கூறினார். திமுக கூட்டணி என்பது குடும்ப உறவு போன்றது.
மேலும் மதுரையில் பாஜக நடத்திய முருகன் மாநாடு வெறும் ஓட்டுக்காக நடத்தப்பட்ட மாநாடு எனவும், உண்மையில் முருகன் மாநாடு என்பது திமுக அரசு பழனியில் நடத்தியது தான் அதில் தான் தமிழகத்தில் உள்ள அனைத்து மடாதிபதிகளும் கலந்து கொண்டனர் எனக் கூறினார்.