தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கீதா என்பவர் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் கோவில்பட்டியில் உள்ள மொபைல் கடைக்கு சென்று ஒரு செல்போன் வாங்கினார். அதன் மதிப்பு ரூ 3055. வாங்கிய ஒரு வாரத்திற்குள் செல்போனில் ஏதோ கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கீதா கடைக்காரரிடம் சென்று கூறியுள்ளார். அவர் அதனை சரி செய்துவிட்டு கீதா விடம் கொடுத்து விட்டார். அதன் பின்னர் மீண்டும் செல்போன் சரிவர இயங்காததால் கீதா கடைக்காரரிடம் சென்றார். வாங்கிய சில நாட்களிலேயே செல்போன் இவ்வாறு ஆனதால் மன வேதனையடைந்த கீதா தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடைக்காரர் மீது வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி செல்போனின் குறைபாட்டால் நுகர்வோர் பாதிக்கப்பட்டதால் அவர் வாங்கிய செல்போனின் விலை ரூ 3055 மற்றும் நஷ்ட ஈடாக ரூ.30,000, வழக்கு செலவிற்காக ரூ 5,000 என மொத்தம் ரூ. 38055 தொகையை நுகர்வோருக்கு 2 மாதத்திற்குள் வழங்க வேண்டும்.

அவ்வாறு வழங்கவில்லையென்றால் அந்த தொகையை செலுத்தும் தேதி வரை வருடத்திற்கு 9% வட்டியுடன் நுகர்வோருக்கு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்.