மத்தியப் பிரதேச மாநிலம் டாப்ரா பைபாஸ் ஹைவே பகுதியில் உள்ள ரேஞ்ச் பஞ்சாப் ஹோட்டலில், நான்கு மதுபானம் அருந்தியவர்கள், பில்லுக்காக பணம் செலுத்த மறுத்ததுடன், ஹோட்டல் ஊழியரை தாக்கி, உடைமைகளை சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் ஹோட்டலுக்குள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.

சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட ஹோட்டல் வேலைக்காரர் ஜெய்தீப் வாஷ்கர் கூறும்போது, அந்த நான்கு பேரும் உணவுக்குப் பிறகு சேவையில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறி, பில் தர மறுத்தனர். பணம் கேட்டதும் அவர்கள்  தாக்கத் தொடங்கினர். பிளேட், நாற்காலி, கவுண்டர் என பல பொருட்களை உடைத்து தகராறு செய்தனர். மேலும், ஜெய்தீப்பை பலமுறை அறைந்தும், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

“>

சிசிடிவி காட்சிகள் மூலம் அவர்களது அடையாளம் அந்ஷுல் மோடி, அரவிந்த் ராவத், ராஜேந்திர ராவத், தீபக் ராவத் எனக் காணப்பட்டுள்ளனர். இவர்களில் அந்ஷுல் மோடி கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற மூவரும் தப்பிச் சென்றுள்ளனர். போலீசார் தாக்குதல் மற்றும் எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விரைந்தும் தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.