
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் இடத்தை பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா ஆய்வு செய்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ரம்ஜான் விழாவில் திருமாவளவன் கடைசி நேரம் வரை குல்லா போட்டுக் கொண்டிருந்தார். அவர் முருகன் கோவிலில் திருநீரை அழித்ததால் இதை கூற வேண்டிய நிர்பந்தம் வந்துவிட்டது.
முருகனை தமிழ் கடவுள் என்று கூறுபவர்கள் திருச்செந்தூர் குடமுழக்கிற்கு வருவார்களா. அரசியலில் தீய சக்திகள் இருந்தால் அதை அழிக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை.
ஆந்திர துணை முதல்வர் முருகன் மாநாட்டில் கலந்து கொள்ள வருவதற்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்கலாமா.? மொழி ரீதியாக இந்துக்களை பிரிக்க பார்க்கிறார்கள். இதனை அடுத்த ஒன்பது மாதங்களுக்கு இந்துக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். மேலும் அடுத்து வரும் தேர்தலில் கண்டிப்பாக இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று கூறினார்.